மேலும் 2 கொரொனா மரணங்கள்!

Date:

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 02 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்று (20) அறிவித்துள்ளார்.

இதன்மூலம் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது.

இன்று அறிவிக்கப்பட்ட மரண விபரங்கள் வருமாறு-

குருவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த, 66 வயதான ஆண் ஒருவர், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் இருந்து கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (19) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், சுவாசத் தொகதி செயலிழப்பு, குருதி விஷமடைவு, கொவிட்-19 நிமோனியா மற்றும் புற்நோய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திஹாரி பிரதேசத்தைச் சேர்ந்த, 78 வயதான ஆண் ஒருவர், கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் இருந்து கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (20) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய...

ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் — பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில்

ஆலிம்களும் சமூகத்தின் அறிவுசார் வளமாக விளங்கும் புத்திஜீவிகளும் இணைந்து செயற்பட்டு, சமகால...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்