நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலத்தை வழிநடத்தும் இந்திய விஞ்ஞானி : யார் இந்த ஸ்வாதி மோகன்?

Date:

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் (Perseverance rover) விண்கலம் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலத்தை வழிநடத்தும் குழுவின் தலைவரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்வாதி மோகனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறன.

பெர்சவரன்ஸ் ரோவர் ஜி.எம்.டி நேரப்படி சரியாக நேற்று (பிப்.,18, வியாழக்கிழமை) இரவு 20.55 செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. செவ்வாயின் மேற்பரப்பிலிருந்து புதிய ரோவர் எடுத்த முதல் புகைப்படத்தையும் பெர்சிவரன்ஸ் ரோவர் அனுப்பியுள்ளது.

இந்த ரோவர் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான நாசா, செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும் பணியை மேற்கொண்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு க்யூரியாசிட்டி ரோவரை, செவ்வாய் கிரகத்தின் வேறொரு பள்ளத்தில் நாசா தரையிறக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலம் செவ்வாயின் மேற்பரப்பை வெற்றிகரமாக அடைந்த செய்தியையடுத்து வழிநடத்தும் குழுவின் தலைவர் ஸ்வாதி மோகனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

நாசா புரொபல்சன் லேபரேட்டரி வழிநடத்தும் குழு தலைவராக உள்ள ஸ்வாதி மோகன் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். ஸ்வாதிக்கு ஒரு வயதாக இருக்கும்போது அவரது பெற்றோர் அமெரிக்காவுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர்.

ஸ்வாதி தனது இளமை பருவம் முதல் வடக்கு வெர்ஜினியா – வாஷிங்டனில் கழித்துள்ளார். ஸ்வாதிக்கு 9 வயதாக இருக்கும்போது ஸ்டார் ட்ரிக் விண்வெளி தொடரை பார்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு விண்வெளி குறித்த ஆர்வம் ஏற்பட்டு விண்வெளி துறையில் டாக்டர் பட்டம் பெற்று தற்போது நாசாவின் முக்கிய திட்டங்களில் பணியாற்றி வருகிறார்.

spot_imgspot_img

More like this
Related

அஜித் தாயார் உடலுக்கு நேரில் அஞ்சலி: முதல்வர் விஜய் காதலியுடன் சென்றார்!

அஜித்குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். தன்னுடன்...

எரிபொருள் விலைகள் மீண்டும் எகிறின!

செபெட்கோ நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை திருத்தத்தை அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட...

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்