நெல்லியடி சந்தையில் சிற்றுண்டிச்சாலை நடத்துபவருக்கு கொரோனா!

Date:

நெல்லியடி பொதுச்சந்தைக்குள் உணவகம் நடத்தும் ஒருவர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார்.

வடக்கில் இன்று 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம், யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடம் என்பவற்றில் 828 பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர், கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 2 பேர், நோய் அறிகுறியுடன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற ஒருவர், அச்சுவேலி சந்தையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் குடும்ப உறுப்பினர் ஒருவர், முல்லைத்தீவில் ஒருவர், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டவர், நெல்லியடி பொதுச்சந்தைக்குள் சிற்றுண்டிச்சாலை நடத்துபவர். நெல்லியடி சந்தைக்குள் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் ‘சரக்கு’ விற்ற பெண் கைது!

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள யூனியன்கொலனி பிரதேசத்தில் சட்டவிரோதமாக பௌர்ணமி தினத்தில் மதுபான...

அஜித் தாயார் உடலுக்கு நேரில் அஞ்சலி: முதல்வர் விஜய் காதலியுடன் சென்றார்!

அஜித்குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். தன்னுடன்...

எரிபொருள் விலைகள் மீண்டும் எகிறின!

செபெட்கோ நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை திருத்தத்தை அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்