குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று (18) சுமார் 3 மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.
றோயல் பார்க் கொலைச் சம்பவத்தில் குற்றவாளியான ஜூட் ஷ்ரமந்தவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்கள் தொடர்பில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டன.
அவர் வசிக்கும் பௌத்தலோக மாவத்தையில் உள்ள வீட்டுக்குச் சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இந்த வாக்குமூலத்தைப் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஜூன் 30, 2005 அன்று, ராஜகிரிய ரோயல் பார்க் சொகுசு குடியிருப்பு தொகுதியில் 19 வயதான யுவோன் ஜோன்சன் என்ற யுவதியை கழுத்தை நெரித்து, தாக்கி கீழே தள்ளிவிழுத்தி கொன்ற குற்றச்சாட்டின் பேரில், காதலன் கைது செய்யப்பட்டார்.
2012 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றில் இடம்பெற்ற நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் அவருக்கு 11 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர், மனுதாரர்களின் மேல்முறையீட்டிற்குப் பிறகு, மேல்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
பின்னர் குற்றவாளிகள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மீண்டும் மரண தண்டனையை உறுதி செய்தனர்.
இருப்பினும், ஜூட் ஷ்ரமந்தா 2016 இல் ஜனாதிபதியின் மன்னிப்பைப் பெற்றார்.
அவருக்கான பொதுமன்னிப்பு கோரிக்கையை அத்துரலிய ரத்ன தேரரே மேற்கொண்டதாகவும், பின்னணியில் பணப்பரிமாற்றம் நடந்ததாகவும் மைத்திரி தெரிவித்த கருத்து தொடர்பில் அத்துரலிய ரத்ன தேரர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மைத்திரியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.




