கத்தியை காட்டி மிரட்டி எரிபொருள் வரிசையில் முன்னுக்கு சென்ற ரௌடிகள்: வடமராட்சியில் ‘பகீர்’ சம்பவம்!

Date:

யாழ்ப்பாணத்தின் பல எரிபொருள் நிரப்பு நிலைய வரிசைகளில் குண்டர் கும்பல்கள் ஆதிக்கம் செலுத்துவதாக பரவலாக முறைப்பாடுகள் எழுந்து வருகிறது.

எரிபொருள் பெற்றுக்கொள்வதெனில் பல மணித்தியாலங்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை தற்போது காணப்படுகிறது. முதல்நாள் இரவே வாகனங்களை வரிசையில் நிறுத்தினாலே மறுநாள் எரிபொருள் பெறலாமென்ற நிலைமை காணப்படுகிறது.

யாழ்ப்பாணத்தின் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலைய வரிசைகளில் குண்டர் குழுக்களின் ஆதிக்கம் பற்றிய முறைப்பாடுகள் அதிகரித்து வருகிறது.

வரிசைகளில் மக்கள் பல மணித்தியாலங்களாக நிற்கும் போது, எரிபொருள் நிரப்பும் நேரம் நெருங்கும் போது, திடீரென குண்டர் குழுக்கள் வரிசைகளிற்குள் புகுந்து கொள்கிறார்கள்.

அதை யாரும் தட்டிக்கேட்க முயன்றால் அச்சுறுத்தலிற்குள்ளாகிறார்கள்.

வடராட்சி, மந்திகை எரிபொருள் நிரப்பு நிலைய வரிசைகளில், அண்மைய பிரதேசமொன்றில் உள்ள குண்டர்குழுவால் தொடர்ந்து பொதுமக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகி வருவதாக மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலைமையை கட்டுப்படுத்த கடமையிலுள்ள இராணுவத்தினர் மட்டுமே ஓரளவு செயற்படுவதாகவும், ஏனைய தரப்பினர் இந்த நிலைமையை கண்டுகொள்வதில்லையென மக்கள் குற்றம்சுமத்துகின்றனர்.

சில நாட்களின் முன்னர், வரிசைக்குள் புகுந்த இந்த கும்பலிற்கு வரிசையில் நின்ற சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வரிசையில் தாங்கள் நின்றுவிட்டு சென்றதாக பொய் கூறிய அந்த கும்பல், சிறிய கத்திகளை எடுத்து அங்கிருந்தவர்களை மிரட்டி, வரிசையில் முன்னுக்கு சென்று எரிபொருள் பெற்றதாக வரிசையில் நின்ற மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

(மேலே இணைக்கப்பட்டது சித்தரிப்பு படம்)

spot_imgspot_img

More like this
Related

இலங்கையர்களை குறிவைக்கும் அழகான பெண்கள்

சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி தளங்கள் வழியாக இலங்கையர்களைக் குறிவைத்து நடத்தப்படும்...

ஈரான் சிக்கலில் இருந்து விரைவில் வெளியேற ட்ரம்பிற்கு கூட்டுப்படை தலைவர் ஆலோசனை

கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன், ஈரானுடனான மோதலில் இருந்து...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வெள்ளாடுகள் மீட்பு

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற வெள்ளாடுகள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்