ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணத்தை ஒப்படைக்க உத்தரவு!

Date:

ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்களால் கண்டெடுக்கப்பட்ட பணத்தை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

போராட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ரூ.17.8 மில்லியன் பணம் இரண்டு வாரங்கள் கடந்தும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவில்லை என்பது இன்று தெரியவந்தது.

இதன்படி, குறித்த பணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜூலை 10 ஆம் திகதி, பொலிஸ் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட பணத்தொகை தம்மிடம் இருப்பதாகவும், அது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அறிவித்தது.

எனினும், நீதிமன்றத்தில் இன்னும் பணம் ஒப்படைக்கப்படவில்லை.

இதன்படி, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இந்த விடயம் தொடர்பில் சமர்பிக்குமாறு கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.

இதேவேளை, கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட பணத்தை எண்ணும் காணொளிகளில் காணப்பட்ட குழுவொன்றின் அங்கத்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட நால்வர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கொழும்பு கோட்டை நீதவான் நான்கு பேரையும் ரூ. தலா 500,000 சொந்த பிணையில் விடுவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்