நிலையான அரசாங்கம் அமையாவிட்டால் நாடு ஸ்தம்பிக்கும்!

Date:

நிலையான அரசாங்கம் விரைவில் அமைக்கப்படாவிட்டால் நாடு ஸ்தம்பிக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.

அத்தியாவசிய பெட்ரோலியத்திற்கு செலுத்த போதுமான அந்நிய செலாவணி கிடைக்குமா என்பதில் “நிச்சயமற்ற நிலை” உள்ளது என்று அவர் பிபிசியின் நியூஸ்நைட் நிகழ்ச்சியில் கூறினார்.

சர்வதேச பிணை எடுப்புப் பொதியைப் பெறுவதற்கான முன்னேற்றம் நிலையான நிர்வாகத்தைக் கொண்டிருப்பதில் தங்கியுள்ளது, என்றார்.

பொருளாதார நெருக்கடியால் நாடு வெகுஜன அமைதியின்மையின் பிடியில் உள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதையடுத்து, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டாவது நாளாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதையும், உணவு, எரிபொருள் மற்றும் ஏனைய அடிப்படைப் பொருட்களின் விலை சாதாரண மக்களுக்கான விலை உயர்வையும் கண்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

UPDATE: முன்னாள் அமைச்சரின் மகன் சிக்கியது இப்படித்தான்!

சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து ரூ. 20 மில்லியன் கொள்ளையடித்தது தொடர்பாக கொழும்புப்பிட்டிய...

துப்பாக்கிச்சூட்டு முயற்சி தோல்வி

மவுண்ட் லவினியா காவல் பிரிவின் டெம்பிள் ரோட் பகுதியில் உள்ள ஒரு...

சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்