பேருந்துகளுக்கு முறையான டீசல் கிடைக்காததால், திங்கட்கிழமை (6) முதல் அனைத்து தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கொழும்பில் தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக விஜேரத்ன தெரிவித்தார்.
மேலும், டீசல் பெறுவதற்கு பேருந்துகள் பல நாட்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது என்றார்.
தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போவில் எரிபொருள் வழங்குவதாக கூறப்பட்டாலும், அதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என.விஜேரத்ன தெரிவித்தார்.
இந்த வாரம் பயணிகள் பேருந்துகளுக்கு டீசல் வழங்க அரசு முன்னுரிமை அளிக்காவிட்டால், திங்கள்கிழமை முதல் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.




