விமல் வீரவன்சவின் மனைவிக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

Date:

இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக பொய்யான தகவல்களை வழங்கியமை தொடர்பில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சசி வீரவன்சவுக்கு 100,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதவான் அறிவித்தார்.

போலி கடவுச்சீட்டை வைத்திருந்தமைக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 2015 ஜனவரி 23ஆம் திகதி சஷி வீரவன்சவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தது.

சஷி வீரவன்ச 1967ஆம் ஆண்டு பிறந்ததாகவும், பாஸ்போர்ட் போலியாக அவரது பிறந்த ஆண்டு 1971 எனக் குறிப்பிடப்பட்டதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

சசி வீரவங்சவிடம் இரண்டு பிறந்தநாள் கொண்ட இரண்டு தேசிய அடையாள அட்டைகள் இருப்பதாகவும் அந்த நேரத்தில் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

காதலியுடன் ஆந்திராவில் பதுங்கியிருந்த சவுக்கு சங்கர் கைது!

நிபந்​தனை ஜாமீனை மீறி, நீதி​மன்​றத்​தில் சரணடை​யாமல் ஆந்​தி​ரா​வில் தலைமறை​வாக இருந்த சவுக்கு...

பிரான்ஸில் சடலங்களாக மீட்கப்பட்ட தமிழ் தாயும், மகளும்!

பிரான்சின் சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) மாகாணத்திற்குட்பட்ட பான்டின் (Pantin) நகரில், ஈழத்தமிழ்த் தாயும்...

அமெரிக்க, ஈரான் பேச்சுவார்த்தைக்காக பாக். தலைநகரில் 2 நாட்கள் விடுமுறை!

இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகளை முன்னிட்டு, பாகிஸ்தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்