நாவிதன்வெளியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பொலிசாருக்கும் வழங்கப்பட்டது!

Date:

முள்ளிவாய்க்கால் வாரம் கடந்த மே12 ஆம் திகதி தொடக்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று வருகிறது.

இதில் ஒரு அங்கமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று மே 16ஆம் திகதி அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளியில் இலங்கை தமிழரசு கட்சி பிரதேச கிளையினரால் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, வீதியால் வாகனத்தில் சென்ற பொலிசாரும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கி அருந்திச் சென்றனர்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் இறக்குமதி செலவு குறைகிறது!

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உச்சத்தை எட்டிய எரிபொருள் இறக்குமதி செலவுகள்...

கனடா ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்ட இளம் பிசியோதெரப்பிஸ்ட்: ஐ.டி இளைஞனின் அதிர வைக்கும் காதல் குற்றங்கள்!

தெல்தெனிய மாவட்ட மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் ஒரு காரில் மீட்கப்பட்ட சடலம...

டொரொண்டோ பேருந்தில் ஹிஜாப் அணிந்த பெண்ணை தாக்கியதாக குற்றச்சாட்டு: தமிழ் இளைஞர் கைது

கனடாவின் டொரொண்டோ நகரில், ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்ணை இன மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்