சித்திரவதை கொடுமை: படுக்கையில் வைத்தே கணவனை கொன்றுவிட்டு பொலிசாருக்கு போன் பண்ணிய மனைவி!

Date:

தினமும் சித்திரவதை செய்த கணவனை நித்திரையில் வைத்தே கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

லுணுவில, ராஜவத்தை பகுதியில் இந்த கொலை நடந்துள்ளது.

நேற்று (28) அதிகாலை 2 மணியளவில், ஆழ்ந்த உறக்கத்திலிருந்த கணவனின் கழுத்தை, துணியால் நெரித்து கொலை செய்துள்ளார். கணவனின் சித்திரவதை தாங்க முடியாமல் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

ஜானக சம்பத் ஜெயரத்ன (42) என்பவரே கொல்லப்பட்டார். அவரது மனைவி டி.அனுஷா தில்ஹானி (38 ) கொஸ்வத்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

கணவனை கொலை செய்த பின்னர் 119 அவசர இலக்கத்தை அழைத்த மனைவி தகவல் கொடுத்துள்ளார். அதன் பின்னர் வீட்டுக்கு சென்ற பொலிசார் அவரை கைது செய்தனர்.

அவர்களின் 6, 4, 2 வயதான பிள்ளைகள் பொலிசாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர்.

 

spot_imgspot_img

More like this
Related

நாமலுக்கு மீண்டும் விளக்கமறியல்!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில்...

இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்: அரசியல் பிரமுகர்களிடம் திட்ட அறிக்கை கையளிப்பு

இலங்கையின் மூவின ஊடகவியலாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு சிலோன் மீடியா போரத்தினால் முன்மொழியப்பட்டுள்ள...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தமிழக அமைச்சர் ஷாஜகான் விஜயம்!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்குத் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் நேற்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்