சித்திரவதை கொடுமை: படுக்கையில் வைத்தே கணவனை கொன்றுவிட்டு பொலிசாருக்கு போன் பண்ணிய மனைவி!

Date:

தினமும் சித்திரவதை செய்த கணவனை நித்திரையில் வைத்தே கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

லுணுவில, ராஜவத்தை பகுதியில் இந்த கொலை நடந்துள்ளது.

நேற்று (28) அதிகாலை 2 மணியளவில், ஆழ்ந்த உறக்கத்திலிருந்த கணவனின் கழுத்தை, துணியால் நெரித்து கொலை செய்துள்ளார். கணவனின் சித்திரவதை தாங்க முடியாமல் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

ஜானக சம்பத் ஜெயரத்ன (42) என்பவரே கொல்லப்பட்டார். அவரது மனைவி டி.அனுஷா தில்ஹானி (38 ) கொஸ்வத்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

கணவனை கொலை செய்த பின்னர் 119 அவசர இலக்கத்தை அழைத்த மனைவி தகவல் கொடுத்துள்ளார். அதன் பின்னர் வீட்டுக்கு சென்ற பொலிசார் அவரை கைது செய்தனர்.

அவர்களின் 6, 4, 2 வயதான பிள்ளைகள் பொலிசாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர்.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஒரு மருத்துவரை உருவாக்க ரூ.60 இலட்சம் செலவாகிறது!

ஒரு வைத்தியரை உருவாக்குவதற்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான...

“எந்த உணவுகளை வேண்டுமானாலும் சாப்பிடலாம்” – சுற்றுலாப் பயணிகளுக்கு திரிணமூல் அழைப்பு

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்​சிக்கு வந்​தால், பிரபல​மான மீன் உணவு வகைகளுக்​குத்...

நிர்வாகிகள் தேர்தல் பணிகளை புறக்கணித்ததால் தனியாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருத்தணி தவெக வேட்பாளர்

தவெக நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் தேர்​தல் பணி​களை புறக்​கணித்​த​தால், திருத்​தணி தவெக வேட்​பாளர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்