அக்கரைப்பற்று சன்றைஸ் இளைஞர் கழகம் கரம் போட்டியில் சோடி மற்றும் தனிப்பிரிவுகளில் வென்று மாவட்ட போட்டிக்கு தகுதி!

Date:

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் 33 வது இளைஞர் விளையாட்டு போட்டியினை முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டி அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.எம். ஸமீலுல் இலாஹி தலைமையில் அக்கரைப்பற்று கரம் நிலையத்தில் இன்று 28ம் திகதி  நடைபெற்றது.

கழகங்களுக்கிடையிலான இறுதி சுற்றுப்போட்டியில் சன்றைஸ் இளைஞர் கழகமும் ஹிஜ்ரா இளைஞர் கழகமும்  தனி மற்றும் இரட்டையர் போட்டிகளில்  இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் முதலாம் இடத்தினை இரு பிரிவுகளிலும் சன்றைஸ் இளைஞர் கழகம் பெற்றதுடன் மாவட்ட மட்ட இளைஞர் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் ஓய்வு பெற்ற புள்ளிவிபரத்திணைக்கள உத்தியோகத்தரும் அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினருமான ஐ. எல். சரிப்டீன், அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் எம்.எம். றுக்சான் மற்றும் முக்கியஸ்தர்கள், இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

1 பில்லியன் டொலர் மோசடி! சில வங்கிகள் சிக்கியதாக அதிர்ச்சி தகவல்

நாட்டுக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு; சில வங்கிகளுக்கு தொடர்பு...

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்