சாரதியை கட்டி வைத்து அடித்து ATM அட்டையை திருடி பொருள் கொள்வனவு செய்த 2 பேர் கைது!

Date:

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் உயிரிழந்தமை தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக 14 பேரை திட்டமிட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்களில் ஒருவர் நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான கட்டடத் தொழிலாளி எனவும் மற்றையவர் வரகாபொல பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய தனியார் நிறுவன ஊழியர் எனவும் அவர் கூறினார்.

சந்தேகநபர்கள் இருவரும் பாராளுமன்ற உறுப்பினரின் சாரதியை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கண்டுபிடித்துள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவ தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் இருவரும் சாரதியின் மனைவிக்கு சொந்தமான ATM அட்டையை பயன்படுத்தி 250,000 ரூபாவிற்கும் அதிகமான கையடக்க தொலைபேசி உட்பட பல்வேறு கொள்வனவுகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

குறிப்பிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நிதியில் போதைப்பொருள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஹரக் கட்டா மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது!

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் நதுன்...

காசா போர் நிறுத்தத் திட்டத்திற்கான 15 அம்ச செயல்திட்டத்தை அமைதி வாரியம் வெளியிட்டது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா போர்நிறுத்தத் திட்டத்தின் இறுதிக் கட்டங்களைச்...

முன்னாள் பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் சிறையில் அடைக்கப்பட்டனர்

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று, முன்னரே உளவுத்துறை எச்சரிக்கைகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்