சமல் சிவப்பு சால்வையின்றி நாடாளுமன்றம் வந்தது ஏன்?

Date:

ராஜபக்‌ஷ குடும்பத்தினரின் பிரதான அடையாளமாக, கழுத்தில் அணியும் சிவப்பு நிற சால்வையை குறிப்பிடலாம். அந்த குடும்பத்தில் திடீர் அரசியல்வாதியான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தவிர்ந்த மற்றைய அனைத்து ராஜபக்‌ஷக்களும் சிவப்பு சால்வையை தவறாமல் அணிவார்கள்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட  முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ சிவப்பு சால்வையின்றி கலந்து கொண்டிருந்தார்.

நாடு முழுவதும் ராஜபக்‌ஷ குடும்பத்திற்கு எதிரான குரல்களும், போராட்டங்களும் எழுந்துள்ள நிலையில், சமல் ராஜபக்‌ஷ இன்று சால்வையின்றி சபைக்கு வந்தது கவனித்திற்குரியதாகியது.

சால்வை அணியாதது குறித்து ஊடகவியலாளர்கள் குழு அவரிடம் கேள்வி எழுப்பிய போது, ​​அவர் உறுதியான பதில் அளிக்கவில்லை.

இன்றைய சபை அமர்வில் கலந்து கொண்ட பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ ஆகியோரும் சிவப்பு சால்வை அணிந்திருந்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...

அமெரிக்க தடையை கடந்து சென்ற ஈரானின் சூப்பர் டாங்கர்

போருக்கு மத்தியில் இப்பகுதியில் நிலவும் அமெரிக்கத் தடைகள் மற்றும் இராணுவ அழுத்தத்திற்கு...

ஈரான் மீதான முற்றுகை தொடர்ந்தால் செங்கடல் வர்த்தகத்தை முடக்குவோம்!

ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை தொடர்ந்தால், செங்கடல், வளைகுடா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்