வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் வாங்கும் போது, இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினரால் கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று இந்த பரபரப்பு சம்பவம் நடந்தது.
விவாகரத்து வழக்குடைய ஒருவரிடம் 30,000 ரூபா இலஞ்சம் கோரியுள்ளார். இது குறித்து அந்த நபர் கொழும்பு இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினரிடம் முறையிட்டுள்ளார்.
இதன்படி, இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினரால் வழங்கப்பட்ட பணத்தை இன்று மல்லாகம் நீதிமன்றத்திற்கு அருகில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரிடம் வழங்கியுள்ளார்.
இதன்போது, மறைந்திருந்த இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினரால் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டார்.
மானிப்பாய் பகுதியில் வசித்து வரும் நபரே கைதாகினார்.



