லிந்துலை உணவகத்தில் தீ: முதியவர் உயிரிழப்பு!

Date:

இன்று (14) காலை 8 மணியளவில் உணவகம் ஒன்றின் சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் லிந்துலை லாமரியர் தோட்டத்தைச் சேர்ந்த 74 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான மருதைவீரன் பெருமாள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் லிந்துலையில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல்காரராக பணிபுரிந்து வந்த நிலையில், அதிகாலை உணவகத்திற்கு வருகை தந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட போது உணவகத்தில் எவரும் இருக்கவில்லை எனவும், உணவு சமைத்த போது தீயினால் அவர் உயிரிழந்துள்ளதாக உணவகத்தின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரான் தவறாக நடந்தால் மீண்டும் தாக்குவோம்: ட்ரம்ப்

ஈரானுடனான ஒரு ஒப்பந்தத்தின் கருத்தாக்கம் குறித்து தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அதன்...

எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஈரான்

அமெரிக்காவின் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஏற்பட்ட அதிகரித்து வரும் சேமிப்பு நெருக்கடியைச்...

கிளிநொச்சியில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் மே தினத்திற்கு வந்தவர் கைது!

மே 1 அன்று கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகே நடைபெற்ற மே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்