கைப்பற்றப்பட்ட 135 இந்திய படகுகள் ஏலத்தில் விற்பனை!

Date:

யாழ்ப்பாணம் காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 135 இந்தியப் படகுகள் இன்றைய தினம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.

இதன்போது 8 8அடி நீளமான மீன்பிடிப் படகொன்று அதிக தொகையாக 1,350,000 ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

கொழும்பில் இருந்து வந்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள தலைமையக அதிகாரிகள் குழு காரைநகரில் ஏலத்தில் விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ள படகுகளை கடந்த ஒருவாரமாக அதிகமனோர் பார்வையிட்ட நிலையில் இன்றைய தினமும் பலரும் பார்வையிட்டனர்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்தவர்கள்
ஏலத்தில் ஆரம்ப வைப்பு தொகையாக 1,000 ரூபாய் பணத்தை செலுத்தி ஏலத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இலங்கையின் 5 துறைமுகங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான மீன்பிடிப் படகுகள் இன்று முதல் 5 இடங்களில் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இன்றைய ராசி பலன் | 10.08.2026

♈ மேஷம்: புதிய வாய்ப்புகள் கிடைக்கும் நாள். பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். ♉...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்