Pagetamil
இலங்கை

இரணைமடு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு!

வடமாகாணத்தில் பாரிய குளமான இரணைமடுக் குளத்தின் நான்கு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபால், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் வான் கதவுகளை திறந்து விட்டனர்.

அதிக மழைவீழ்ச்சி காரணமாக இரணைமடு குளத்திற்கான நீர் வரத்து அதிகரித்த காரணத்தினால் இன்று (28) அதிகாலை 6 மணி அளவில் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டது.

மூன்றாம் இலக்க வான்கதவு 6 அங்குலமாகவும், நான்காம் இலக்க வான்கதவு 12 அங்குலமாகவும், ஐந்தாம் இலக்க வான்கதவு 12 அங்குலமாகவும், ஆறாம் இலக்க வான்கதவு 6 அங்குலமாக திறக்கப்பட்டுள்ளது மொத்தமாக 3 அடியாக இரணைமடு குளத்தின் நீர் வெளியேறுகிறது.

இதன் பின்னர் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, ‘குளத்தின் நீர்வரத்து அதிகரித்தமையினால் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டது. இரணைமடு குளத்தின் வெளியேறுகின்ற நீரால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை’ என தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுமியை போலி அடையாளத்தில் வெளிநாடு அனுப்பிய முகவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

மாணவிகளுடன் சேர்ந்து மாணவர்களை தாக்கிய ஆசிரியர்

Pagetamil

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

Leave a Comment