26.3 C
Jaffna
February 2, 2025
Pagetamil
குற்றம்

கனடாவிற்கு ஆட்களை கடத்த முயன்ற கண்ணன் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்!

கடல் வழியாக கனடாவுக்கு நபர்களை கடத்த முயன்ற பிரதான கடத்தல்காரரான கண்ணன் உட்பட 8 பேர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிலாபம் மாவட்ட நீதிமன்றத்தினால் நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி சிலாபம் கடற்பகுதியில் பல நாள் இழுவை படகில் இருந்து கனடா நோக்கிச் சென்ற 19 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த மனித கடத்தல் நடவடிக்கையின் மூளையாக இருந்தவர், ‘கண்ணன்’ என்று அழைக்கப்படும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கனடாவுக்குச் அழைத்து செல்வதாககூறி ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ.3 -3.5 மில்லியன் வரை பெற்றுள்ளார்.

யுத்தத்தின் பின் மலேசியாவுக்குத் தப்பிச் சென்ற பிரதான சந்தேகநபரான ‘கண்ணன்’ அண்மையில் இலங்கைக்குத் திரும்பி மனித கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

உடுவில் பிரதேசத்தில் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

Pagetamil

கணவனின் கொடூரம்: மனைவியை கொன்று, சமைத்து, எலும்புகளை உரலில் இடித்த அதிர்ச்சி சம்பவம்!

east tamil

யாழ்ப்பாண கோழி பிடித்த 3 பேர் கைது!

Pagetamil

Leave a Comment