Pagetamil
இலங்கை

நேற்றும் 4 மரணங்கள்!

நாட்டில் நேற்று (10) மேலும் 4 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டன. இதன்படி, இதுவரை 515 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு-

கொழும்பு 14 (கிராண்ட்பாஸ்) பிரதேசத்தைச் சேர்ந்த, 74 வயதான ஆண் ஒருவர், தனது வீட்டில் வைத்து மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த 08ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட் தொற்று மற்றும் உக்கிர நீரிழிவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 09 (தெமட்டகொடை) பிரதேசத்தைச் சேர்ந்த, 57 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த 08ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் உக்கிர நீரிழிவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

அலவத்துகொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 23 வயதான ஆண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த 08ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் உக்கிர குருதி விஷமடைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 77 வயதான பெண் ஒருவர், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (10) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் குருதி விஷமடைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

வெளிமாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் ஆட்களை ஏற்றி வந்து புதுக்குடியிருப்பில் அநுரவின் பிரச்சார கூட்டம்!

Pagetamil

யாழில் இணையக்குற்ற விசாரணைப் பிரிவு ஆரம்பம்

Pagetamil

தேசபந்துவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் பாய்கிறது!

Pagetamil

கிளிநொச்சியை உலுக்கிய சிறார் துஸ்பிரயோக குற்றச்சாட்டு: புலிகள் அமைப்பிலும் இதே குற்றச்சாட்டை சந்தித்தவர்!

Pagetamil

மோடி- அனுர 15 நிமிடங்கள் தொலைபேசி உரையாடல்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!