தென்மராட்சி பகுதியில் இளைஞன் ஒருவர் நெஞ்சில் ஈட்டியால் குத்தப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதி்க்கப்பட்டுளார்.
கெற்பெலி, மிருசுவில் பகுதியில் நேற்றிரவு இந்த சம்பவம் நடந்தது.
29 வயதான இளைஞன் ஒருவரை தாக்கிய கும்பல், அவரது நெஞ்சில் ஈட்டியால் குத்தி படுகாயப்படுத்தியது.
அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இதேவேளை, தாக்குதல் நடத்திய குழுவின் 30 வயதான ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




