சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுடன் செல்பி புகைப்படம் எடுத்து, நாடாளுமன்ற உறுப்பினருக்குரிய சிறப்புரிமையை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா மீறியுள்ளதாக பெரமுன கட்சி கொதித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா நேற்று அங்குணபொலபெலெச சிறைச்சாலைக்கு சென்று, ரஞ்சன் ராமநாயக்க எம்.பியை சந்தித்து பேசினார். இதன்போது, அவருடன் செல்பி படமும் எடுத்துக் கொண்டார். அதை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
சிறைச்சாலைகள் சீர்திருத்த இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த இது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஹர்ஷன ராஜகருணா தனது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறியுள்ளதாகவும், இது குறித்து இன்று சபாநாயகரிடம் நாடாளுமன்றத்தில் முறையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.




