யுவதியொருவரின் புகைப்படத்தை நிர்வாண புகைப்படமாக மாற்றி, அவரிடம் பணம் பறித்த இருவரை எம்பிலிப்பிட்டிய பொலிசார் கைது செய்துள்ளனர்.
அந்த யுவதியின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்ட புகைப்படமொன்றை, நிர்வாண உடலொன்றுடன் பொருத்தி, அவரிடம் மிரட்டி பணம் பறித்தது விசாரணையில் தெரிய வந்தது.
சந்தேக நபர்கள் வைத்திருந்த இரண்டு கணினிகள் மற்றும் இரண்டு மொபைல் போன்களை பொலிசார் பறிமுதல் செய்தனர்.
20 மற்றும் 23 வயதுடைய நபர்கள் பொலன்னறுவை மற்றும் அங்கொடவில் வசிப்பவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.



