கோலியை சுட்டிக்காட்டி இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்!

Date:

இந்தியா, இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழை காரணமாக டிரா ஆன நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. தற்போது மூன்றாவது டெஸ்ட் துவங்கியுள்ளது. இதில் டாஸ்க் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 78/10 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தது. அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 19 ரன்கள் அடித்தார். ஆண்டர்சன், ஓவர்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஓபனர்கள் ரோரி பர்ன்ஸ் (61), ஹசீப் ஹமீது (68) ஆகியோர் அபாரமாக விளையாடி, ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினார்கள். அடுத்து டேவிட் மலான் (70), ஜோ ரூட்டும் (121) அதிரடி காட்டியதால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 400 ரன்களை கடந்தது. தற்போது இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 423/8 ரன்கள் சேர்த்து 345 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி, 17 பந்துகளை எதிர்கொண்டு 7 ரன்களை மட்டுமே அடித்து, ஆண்டர்சன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆண்டர்சனிடம் கோலி ஆட்டமிழப்பது இது 7ஆவது முறையாகும். மேலும், ஒரு சதம் கூட எடுக்காமல் கோலி தொடர்ச்சியாக விளையாடும் 50ஆவது போட்டி இதுவாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் 18 டெஸ்ட், 15 ஒருநாள், 17 டி20 போட்டிகளில் கோலி சதமடிக்கவில்லை. இது கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி கொடுத்துள்ள முன்னாள் வீரர் மனிந்தர் சிங், கோலி அடுத்தவருக்கு அறிவுரை கூடுகிறாரே தவிர அதன்படி அவர் நடப்பதில்லை என விமர்சனம் செய்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய கோலி, ‘சண்டை, பழிவாங்கும் எண்ணங்களை ஓரம்கட்டிவிட வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார். இதனை சுட்டிக்காட்டி மனிந்தர் சிங் பேசியுள்ளார்.

“இரண்டாவது போட்டி துவங்குவதற்கு முன்பு பேசியிருந்த கோலி, ‘இங்கிலாந்து மைதானங்களில் பழிவாங்கும் எண்ணங்களை மனதில் வைத்துக்கொண்டு விளையாடினால், சிறப்பாக விளையாட முடியாது’ எனத் தெரிவித்திருந்தார். அது சரியான கருத்துதான். ஏனென்றால், இங்கிலாந்து களங்களில் சுலபமாக பேட் செய்துவிட முடியாது. ஆனால், கோலி கூறியதை அவரே செய்யவில்லை. இந்திய பிட்ச் போல் இங்கு உடனே கவர் டிரைவ் அடிக்க முடியாது. சிறிது நேரம் தாக்குப்பிடித்து செட்டில் ஆன பிறகுதான் கவர் டிரைவ் அடிக்க வேண்டும். இதற்குமுன் இப்படி செயல்பட்டுத்தான், இங்கிலாந்தில் ஒரு தொடரில் 600 ரன்கள் குவித்தார். பிட்சின் தன்மை உணரும்வரை பொறுமை முக்கியம்” எனக் கூறினார்.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக...

யாழ் போதனா வைத்தியசாலை தீ விபத்து; பெருமளவு மருந்துகள் அழிவு… மின் ஒழுக்கு காரணம்?: யாழில் தீயணைப்பு வசதி இல்லாததை வெளிச்சமிட்ட சம்பவம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட...

தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்க 2 காரணங்கள்… – திருமாவளவன் விவரிப்பு

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்