அத்தியாவசிய பொருட்களின் விலை அரசாங்கத்தின் கையை மீறி சென்று விட்டது!

Date:

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ரூ .5,000 உதவித்தொகைக்கு பதிலாக ரூ .1,998 மதிப்புள்ள பொருட்களின் பொதியை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த பொதி விநியோக கட்டணமின்றி வழங்கப்படுமென அரசாங்கம் கூறியதும் தவறானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வாரம் ஒரு கிலோ சீனியின் விலை ரூ .160 ஆக இருந்தது, ஒரு வாரத்தில் ரூ .210 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சந்தையில் பால்மா பவுடருக்கு அசாதாரண பற்றாக்குறை இருப்பதாகவும், எரிபொருள், எரிவாயு, அரிசி, மருந்துகள் மற்றும் பாண் உள்ளிட்ட பல நுகர்வோர் பொருட்களின் விலையில் அசாதாரண அதிகரிப்பு இருப்பதாகவும், விலைக் கட்டுப்பாட்டில் அரசாங்கம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதை இது குறிக்கிறது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

மருந்துக்கு தட்டுப்பாடு இல்லை என்று அரசாங்கம் கூறினாலும், அமைச்சர்கள், தூதுவர்கள் மூலம் மருந்துகளுக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனர் என சுட்டிக்காட்டினார்.

தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் தரவுத்தளத்தில் சேமித்து வைக்கப்பட்ட தகவல்கள், மருந்துகள், ஓர்டர்கள் மற்றும் பதிவுகள் உள்ளிட்ட தகவல்கள் அழிக்கப்படுவது மிகவும் கவலைக்குரியது. ஒரு மோசடி நடைபெறுகிறதா என்பதை அறிய துல்லியமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் பாஜகவுக்கு பேரிடி: 27-ல் வென்றது 1 மட்டுமே – காரணம் என்ன?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 1 தொகுதிகளில்...

தேர்தலில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட அதிமுக: தொடர்ந்து இருமுறை தோற்றது இல்லை

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தொடர்ந்து 2 முறை அதி​முக தோற்​றதே இல்​லை. ஆனால்...

முதல்வர் ஆகிறார் விஜய்… தமிழகத்தில் அமையும் ‘மைனாரிட்டி’ அரசும், மக்கள் தீர்ப்பும் சொல்வது என்ன?

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு ஊடே வெளியான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தவெக-வுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்