இந்திய வீரர்களை சீண்டியது இங்கிலாந்துக்கு மிகப்பெரிய பாதிப்பு!

Date:

இந்திய வீரர்களை சீண்டியது இங்கிலாந்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது: ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 

 விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் 5 டெஸ்ட் தொடரில் 2 போட்டிகள் முடிந்துள்ளன.

 நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னணியில் உள்ளது. 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 25-ந்தேதி லீட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

 லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு கட்டத்தில் தோல்வி நிலையை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அதில் இருந்து மீண்டு ரன்களை குவித்து, சிறப்பான பந்து வீச்சின் மூலமும் வெற்றியைப் பெற்றது.

 இந்த நிலையில் 2-வது டெஸ்டில் இந்தியாவின் வெற்றி தகுதியானது என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்தியாவின் 2-வது இன்னிங்சில் தொடக்கத்திலேயே விக்கெட் சரிந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் பின்கள வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்திய வீரர்களை உசுப்பேற்றியதால் அவர்கள் அடிபட்ட புலிபோல் விளையாடினார்கள். சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தார்கள். இந்த வெற்றிக்கு இந்தியா தகுதியானது.

 இந்த 5 நாள் ஆட்டமும் பார்ப்பதற்கு சிறப்பாக இருந்தது. ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தனது ஆதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் போனது ஏமாற்றமே. இந்திய வீரர்களை அவர்கள் சீண்டியது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

 இங்கிலாந்து அணியின் பேட்டிங் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் பேட்டிங் வரிசையில் கண்டிப்பாக மாற்றம் செய்ய வேண்டும். இங்கிலாந்து அணியில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அதில் எந்த சந்தேகமும் இல்லை. இனி வரும் டெஸ்ட் போட்டி களில் மாற்றம் மிகவும் அவசியம் ஆகும்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்