சிகிரியாவில் கிரிக்கெட் வீரர் முறையற்ற விதத்தில் காணி பிடிப்பு!

Date:

சிகிரிய பகுதியில் பெறுமதிமிக்க காணிகளை கிரிக்கெட் வீரர் ஒருவர் வாங்கிய விவகாரத்தில் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். அத்துடன், இதுவரை வழங்கப்பட்ட பத்திரங்களை உடனடியாக இரத்து செய்யுங்கள் என மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே உத்தரவிட்டுள்ளார்.

நேற்று (05) நடைபெற்ற மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இந்த உத்தரவுகளை வழங்கினார்.

இது மிகவும் மோசமான செயல். குறைந்த வருமானம் உடையவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலங்களை இந்த முறையில் தவறாகப் பயன்படுத்தப்படுவது ஒரு மோசமான சூழ்நிலை. சம்பந்தப்பட்ட நிலங்களை வழங்கும் செயல்களை ரத்து செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய மாகாணத்திலும், மாத்தளை மாவட்டத்திலும் நிலமற்ற மக்களுக்கு நிலங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என ஆளுநர் வலியுறுத்தினார்.

சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து வருவதாகவும், தொடர்புடைய கிராமசேவகர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.

கிராமசேவகரின் பிள்ளையை கண்டியிலுள்ள பிரபலமான பாடசாலையில் சேர்க்க கிரிக்கெட் வீரர் நடவடிக்கையெடுத்ததாக தகவல் கிடைத்துள்ளதாக ஆளுனர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

ஈரானுடனான ஒப்பந்தம் நெருங்கி விட்டது!

அமெரிக்காவும் ஈரானும் இன்னும் இறுதிக் கட்டத்தை எட்டவில்லை, ஆனால் தங்கள் மோதலைத்...

டெங்கு உயர் ஆபத்து மாவட்டமாக கொழும்பு அறிவிப்பு; ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை

டெங்கு அபாயம் அதிகரிப்பு: கொழும்பில் ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை கொழும்பு...

அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகுமா? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு

ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு; ஹோர்முஸ் நீரிணை திறப்பு, பொருளாதார தடைகள் நீக்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்