கிளிநொச்சி வைத்தியசாலைக்கு குருதி தேவை!

Date:

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு குருதி தேவைப்படுவதாக குருதிப் பிரிவு தெரிவிக்கின்றது.

AB, B குருதிவகை பற்றாக்குறை காணப்படுவதாகவும், கொவிட் தடுப்பூசி நாடளாவிய ரீதியில் செலுத்தப்படுவதால் குருதி தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் குருதி கொடையாளர்கள் தாமாக முன்வந்து குருதி கொடை வழங்கி வருகின்றனர்.

எனினும் விபத்து மற்றும் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பங்களில் குருதி தேவை ஏற்படும் சூழல் நிலவும் சந்தர்ப்பங்களில் நெடுக்கடி ஏற்படும் சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் குருதி பற்றாக்குறையை தீர்க்க கொடையாளர்கள் முன்வரவேண்டும் என கிளிநொச்சி வைத்தியசாலையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடையாளர் ஒருவர் முன்வரும்போது, அவர் கொவிட் தொற்றுக்குள்ளானவர் எனின் குணமடைந்த பின்னர் எடுக்கப்பட்ட PCR பரிசோதனை திகதியிலிருந்து 1 மாதம் கடந்தவராகவும், தடுப்பூசி பெற்றிருப்பின் 1 வாரம் கடந்தவராகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இவற்றையும் கருத்தில் கொண்டு இரத்த வங்கிக்கு குருதி கொடைகளை வழங்க முன்வர வேண்டும் என வைத்தியசாலையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஒரு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின்...

காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு: உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட உணவக/வர்த்தக நிலையமொன்றில்...

எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்-அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்