இலங்கைக்கு கடன்களை சீனா அள்ளி வழங்கியதன் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இதனை தெரிவித்தார்.
சீனா உள்ளிட்ட கடன் வழங்கிய பல நாடுகள், அந்தந்த நாடுகளில் உள்ள பல்வேறு சொத்துகளை கூட உரிமை கோரலாம் என்பதை சுட்டிக்காட்டினார்.
“சாம்பியாவை உதாரணமாக எடுத்துக்கொண்டால், சீனா சாம்பியாவுக்கு பல கடன்களை வழங்கியுள்ளது. அந்த நாடு இப்போது கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலைமைக்கு வந்துள்ளதால், அந்த நாட்டின் செம்பு, தங்கம் மற்றும் வெள்ளி இருப்புக்களை சீனா கோருகிறது.
ஒரு ஞாயிறு செய்தித்தாள் இன்று அங்கோலா, சிம்பாப்வே, மங்கோலியா மற்றும் இலங்கை பற்றிய ஒரு ஆய்வை நடத்தியது, சர்வதேச நாணய நிதியத்தைப் போலல்லாமல் சீனாவிலிருந்து கடன் பெறும்போது, கடன் வாங்கியவர் சீன நாட்டின் நிபந்தனை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியம் வளங்களை கோரவில்லை, நாட்டின் இயற்கை வளங்களை சீனா கோருவதைப் போலல்லாமல், புவியியல் இருப்பிட நன்மைகளின் அரசியல் ஆதரவை மட்டுமே எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.




