728,000 அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

Date:

ஜப்பானால் வழங்கப்பட்ட 728,000 அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் இன்று நாட்டை  வந்தடைந்தது.

தடுப்பூசியை ஏற்றி வந்த UL-455 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மாலை 4.17 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

ஜப்பானில் நரிதா விமான நிலையத்தில் இருந்து காலை 11.23 மணியளவில் புறப்பட்ட விமானத்தில் உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் குழுவும் வந்தது.

அதன்படி, எட்டு நாட்களில் இலங்கை 1.4 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை, இலங்கைக்கு 728,460 டோஸ் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி கிடைத்தது, இது ஜப்பான் அரசாங்கத்தின் நன்கொடையாகும்.

கடந்த வாரம் வந்த தடுப்பூசி டோஸ்கள் மேற்கு மாகாணத்தில் வசிப்பவர்களிற்கு இரண்டாவது டோஸாக ஏற்றப்பட்டது. ஏனையவை, கேகாலையில் வசிப்பவர்களுக்கு தடுப்பூசி போட பயன்படுத்தப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்: புதிய தாக்குதலை தொடங்கியது அமெரிக்கா!

"அங்கீகரிக்கப்படாத பாதையில்" சென்ற ஒரு கப்பல் மீது எச்சரிக்கைக்காக துப்பாக்கிச் சூடு...

நீர்கொழும்பு சிறையில் கொலைவெறியாட்டம் ஆடிய 75 கைதிகள் அடையாளம் காணப்பட்டனர்!

நீர்கொழும்பு சிறையில் 8 சிறை உத்தியோகத்தர்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை...

“எம்.எஸ்.வி முதல் அனிருத் வரை பாடிய கானகோகிலம்” – எஸ்.ஜானகி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

இந்திய திரையுலகின் புகழ்பெற்ற பாடகரான எஸ்.ஜானகி மறைவுக்கு முன்னாள் முதல்வரும் திமுக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்