மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்ற 100 பேருக்கு கொரோனா!

Date:

மட்டக்களப்பு, களுவங்கேணி மாரியம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோயில் குருக்கள், தலைவர், செயலாளர் ஆகியோரும் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

அந்த கோயிலில் வருடாந்த உற்சவத்தை நடத்த சுகாதாரத்துறையினரின் அனுமதி கோரப்பட்டிருந்தது. 15 பேருடன் உற்சவத்தை நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனினும், கடைசிநாள் திருவிழாவில் சுகாதார விதிமுறைகளை மீறி பெருளமளவிலான மக்கள் திருவிழாவில் கலந்து கொண்டிருந்தனர்.

இதையடுத்து கடந்த 3 நாட்களாக அந்த பகுதியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 100 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, ஆலயம் அமைந்துள்ள வந்தாறுமூலை கிழக்கு கிராம சேவகர் பிரிவை தனிமைப்படுத்துமாறு, கொழும்பு கோவிட் செயலணிக்கு மட்டக்களப்பு சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...

வதந்திகளையும், பொய்களையும் மட்டும் பேசிய விஜய்!

“சட்டம் - ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்