வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக வில்பத்து தேசிய பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்ததற்காக ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி உட்பட எட்டுப் பேரை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வில்பத்து தேசிய பூங்காவில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இலந்தகஹவெவ பகுதியில் எட்டு வேட்டைக்காரர்களை கைது செய்தனர்.
சந்தேகநபர்களிடமிருந்து வெடிபொருட்கள், துப்பாக்கிகள் மீட்கப்பட்டன.




