பசில் பதவியேற்றதில் வவுனியா வாசிகள் சிலருக்கு வந்தது மகிழ்ச்சி!

Date:

பசில் ராஜபக்ஸ நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்ததையடுத்து வவுனியாவில் வெடி கொழுத்தி கொண்டாட்டம்

பசில் ராஜபக்ஸ நிதி அமைச்சராக பதவியேற்றதையடுத்து பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்களால் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இன்று (08.07) வெடிகொழுத்தி, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பசில் ராஜபக்ஸ் இலங்கையின் புதிய நிதியமைச்சராகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் இன்று (08) காலை பதவி பிரமாணம் செய்துக் கொண்டார்.

இதனையடுத்து, பொதுஜன பெரமுன கட்சியின் வவுனியா மாவட்ட ஆதரவாளர்களினால் பசில் ராஜபக்ஸ அவர்களை வரவேற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியும், வெடி கொழுத்தி மகிழ்ந்ததுடன், அங்கு நின்றவர்கள், வீதியால் சென்றவர்களுக்கு இனிப்புக்களும் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

குறித்த நிகழ்வில் வவுனியா நகரசபையின் உப தவிசாளர் சு.குமாரசாமி, பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் ஆதரவாளர்கள், பொதுஜன ரெமுனவின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- ஈரான் சண்டை தொடர்கிறது!

கடந்த மாத போர் நிறுத்தத்தை முற்றிலுமாகச் சிதைத்த, ஒரு வார காலமாக...

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்