மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைக்க எந்தவித தடையும் இல்லை :உயர்நீதிமன்ற மதுரை கிளை !

Date:

மத்திய அரவை ஒன்றிய அரசு என்று அழைக்க எந்தவிதமான தடையும் இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, மத்திய அரசை ஒன்றிய அரசு ஒன்று அழைப்பதை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஒன்றிய அரசு என மத்திய அரசை அழைப்பதை தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பழனியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு ஒருவரை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், ஒருவரை இப்படித்தான் பேச வேண்டும் என்று எவ்வாறு உத்தரவிட முடியும்…? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

எனவே, மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைக்க தடை விதிக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்