சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபடும் பொலிசார் மீது கடுமையான நடவடிக்கை!

Date:

சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் பொலிசாருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்குமாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் செய்த செயல்களால் பொலிசாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாக பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

காவல்துறை அதிகாரிகள், காவல் நிலையங்களுக்கு பொறுப்பான அதிகாரிகள் மற்றும் மேற்பார்வை செய்யும் அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நெலுவ பொலிஸ் நிலையத்தில் ஒரு சிறுமியை முத்தமிட்டமை, பொலிஸ் பேருந்துகளில் இருந்து எரிபொருள் பெறுதல் மற்றும் வரக்காப்பொல நடந்த மற்றொரு சம்பவம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை அவர் குறிப்பிட்டார்.

இலங்கை காவல்துறை சிறப்பு விசாரணைகளை மேற்கொண்டு காவல்துறை அதிகாரிகள் மற்றும் மேற்பார்வை செய்யும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்