கர்ப்பமாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்கிற்கு தற்போது வளைகாப்பு நடந்து முடிந்து இருக்கிறது. அதன் புகைப்படங்களை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.
சீரியல்கள் மற்றும் சில திரைப்படங்களில் நடித்து இருப்பவர் ஸ்ரீதேவி அசோக் குமார். அவர் விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி என்ற தொடரில் தான் கடைசியாக நடித்து வந்தார். அவர் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் கணவருடன் சேர்ந்து போட்டோஷூட் நடத்தி இருந்தார். அந்த புகைப்படங்களும் அதிகம் வைரலானது.
கர்ப்பமாக இருக்கும் நடிகை ஸ்ரீதேவி அசோக் குமாருக்கு நடிகை ஸ்ரேயா அஞ்சன் சர்ப்ரைசாக சென்று வளைகாப்பு நடத்தி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
அதன் புகைப்படங்களை ஸ்ரீதேவி அசோக் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.





