ஹொட்டலை விட்டு வெளியேறிய 3 இலங்கை வீரர்கள் இடைநீக்கம்!

Date:

இலங்கை கிரிக்கெட் வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக, நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரை இங்கிலாந்து குழாமிலிருந்து, இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) செயற்குழு இடைநீக்கம் செய்துள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உயிர் குமிழியை மீறிய குற்றச்சாட்டில் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.எல்.சி தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார்,

“அடுத்த விமானத்தில் நாங்கள் அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவோம், அவர்கள் விசாரணை நிலுவையில் உள்ளது” என்று ஷம்மி சில்வா  தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் வீரர்களான நிரோஷன் டிக்வெல்ல மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு (27) டர்ஹாம் வீதிகளில் சுற்றித் திரிவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து இந்த இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, உயிர்க் குமிழி பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீறி வீரர்கள் வெளியில் சென்றுள்ளனர்.

இரு அணிகளிற்கிடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை (29) டர்ஹாமில் நடைபெறவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அதிகாரமற்று கூடும் தலைவர்கள்; உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாடல்

நீண்டகாலமாகப் பல்வேறு ஆட்சிகளில் அங்கம் வகித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள்,...

5 கிராம் ஐஸ் வைத்திருந்தவருக்கு ஆயுள்!

5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்