வாய்ப்பு இல்லை: சினிமாவுக்கு குட்பை சொல்லும் வாரிசு நடிகை!

Date:

80களில் வெற்றிகரமான நடிகையாக இருந்த ராதாவின் மூத்த மகள் கார்த்திகா அம்மா வழியில் நடிகையானார். சமந்தாவின் கணவர் நாக சைதன்யா நடித்த ஜோஷ் தெலுங்கு படம் மூலம் அவர் நடிக்க வந்தார். மறைந்த கே.வி. ஆனந்த் இயக்கிய கோ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். பாரதிராஜா இயக்கிய அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்களில் நடித்தார். அவர் அருண் விஜய்யுடன் சேர்ந்து நடித்த வா டீல் படம் பல ஆண்டுகளாக ரிலீஸாகாமல் இருக்கிறது.

கார்த்திகா தமிழ், தெலுங்கு தவிர்த்து மலையாளம், கன்னட மொழி படங்களிலும் நடித்தார்.

கடந்த 6 ஆண்டுகளாக அவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. இதற்கிடையே ஆரம்ப் என்கிற இந்தி தொலைக்காட்சி தொடரிலும் நடித்தார் கார்த்திகா.

நல்ல அழகும், நடிக்கும் திறனும் இருந்தும் அவரால் தன் அம்மாவை போன்று முன்னணி நடிகையாக முடியவில்லை. படித்த பெண்ணான கார்த்திகா தன் தந்தையின் யுடிஎஸ் குரூப் ஆஃப் ஹோட்டல்ஸின் டைரக்டராக இருக்கிறார்.

கார்த்திகாவுக்கு பட வாய்ப்புகள் சுத்தமாக வருவது இல்லையாம். இதையடுத்து சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு தன் அப்பாவின் ஹோட்டல் தொழிலில் மட்டும் கவனம் செலுத்துவது என்று கார்த்திகா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கார்த்திகாவின் தங்கை துளசி, மணிரத்னத்தின் கடல் படம் மூலம் நடிகையானார். பின்னர் ஜீவாவின் யான் படத்தில் நடித்தார். கடந்த 7 ஆண்டுகளாக துளசி எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா முத்தரப்பு பேச்சு விரைவில்

உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு அமைதிப்...

நாடாளுமன்ற குடியிருப்பை பெற்றவர்களின் விபரம்

கோட்டையில் உள்ள மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில், தற்போதைய நாடாளுமன்றத்தைச்...

சிஐடியினர் அநுராதபுரம் சென்றால் முழு திருடர்களையும் ஒரே மேடையில் பிடித்திருக்கலாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுன தலைமையிலான பேரணியையும் ராஜபக்ச குடும்பத்தையும் விமர்சித்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்