வத்தளை பகுதியில் போக்குவரத்து கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரியை காரில் சென்ற தொழிலதிபர் ஒருவர் இடித்து தள்ளிய விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று (22) இந்த சம்பவம் நடந்தது.
35 வயதான தொழிலதிபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜா-எலவிலிருந்து கொட்டஹேனாவுக்கு தனது காரில் சென்று கொண்டிருந்த போது தொழிலதிபர், அந்த பொலிஸ்காரரை மோதி தள்ளியுள்ளார். தான் வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த போது தூங்கி விட்டதாக அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.




