25.8 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இந்தியா உலகம்

மாற்றுத்திறனாளிகளை கட்டாய மதமாற்ற முயற்சி: பாகிஸ்தான் உளவாளிகள் கைது!

வாய் பேச மற்றும் காது கேட்க இயலாதவர்களை கட்டாய மத மாற்றம் செய்ய முயற்சித்த பாகிஸ்தான் உளவு அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேரை உத்தர பிரதேச போலீசார் கைது செய்தனர்.உத்தர பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க அரசு நடக்கிறது. இங்குள்ள நொய்டாவில் வசிப்பவர்கள் உமர் கவுதம், ஜஹாங்கீர்.

வாய் பேச மற்றும் காது கேட்க இயலாத மாற்றுத் திறனாளியான பெண் மற்றும் சிறுமியை கட்டாயப்படுத்தி, முஸ்லிம் மதத்துக்கு இவர்கள் மாற்ற முயற்சித்தனர்.பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது, கைது செய்யப்பட்ட இருவரும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள். இதுவரை, 1,000 பேரை கட்டாய மத மாற்றம் செய்துள்ளனர். இதற்காகவே, நொய்டா ஜாமியா நகரில் ‘இஸ்லாமிய தாவா சென்டர்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கு தான், பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களை மூளைச்சலவை செய்து மதமாற்றம் செய்யும் பணி நடக்கிறது. பணம், வேலைவாய்ப்பு, திருமணம் ஆகியவற்றை காரணமாக வைத்து, ஏராளமானோரை மதம் மாற்றும் பணி நொய்டாவில் நடைபெற்று வருகிறது. ஒரு பெரும் கும்பல் இந்த வேலையை செய்து வருகிறது. அவர்களை பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Pagetamil

உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

Pagetamil

சரணடைந்தார் ஜெலன்ஸ்கி!

Pagetamil

‘இந்த ஆள் அமைதியை விரும்பவில்லை’: மீண்டும் ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

Pagetamil

ரஷ்யா மீதான தடைகளின் ஒரு பகுதியை தளர்த்தும் திட்டத்தை தயாரிக்கிறது அமெரிக்கா!

Pagetamil

Leave a Comment