போகக்கூடாத இடத்திற்கு போன இளைஞனின் சடலம் மீட்பு!

Date:

பதுளை – நாரங்கல மலைத் தொடரில் நண்பர்களுடன் இரவில் கூடாரம் அமைத்து, தங்கியிருந்த நிலையில் இளைஞர் போன இளைஞனின் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

அவிசாவளையைச் சேர்ந்த அகலங்க பெரேரா (22) என்பரே சடலமாக மீட்கப்பட்டார்.

நண்பர்கள் 6 பேருடன் அங்கு சென்று கூடாரம் அமைத்து தங்கியிருந்தவர், இரவு 9.30 மணியளவில் மலசலக்கூடத்துக்கு சென்று வருவதாகக் கூறி சென்றுள்ளார். எனினும், அவர் திரும்ப வரவில்லை என பொலிஸாரிடம் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தினரின் உதவியுடன் நடத்தப்பட்ட தேடுதலில், செங்குத்தான பள்ளத்தில் பாறையில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது.

அண்மையில் நடந்த பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அந்தப்பகுதியில் கூடாரம் அமைத்து தங்க தடைவிதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்