தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களின் சிம் கார்டுகள் முடக்கப்படும்: பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை!

Date:

பஞ்சாப் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயங்கும் மக்களின் சிம் கார்டுகளின் இணைப்புகள் முடக்கப்படும் என அந்த மாகாணத்தின் அரசு தெரிவித்துள்ளது.

கொரோனாவை முறியடிக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வது தான் ஒரே தேர்வு என உலக பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனால் பல்வேறு நாடுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பெருவாரியான மக்கள் முன்வரதாதல் இந்த தடாலடி முடிவை அந்த மாகாண அரசு எடுத்துள்ளது. இந்த மாகாணத்தில் தடுப்பூசி செலுத்த அரசு நிர்ணயித்த இலக்கை அடைய முடியாததால் இந்த ஏற்பாட்டை கையில் எடுத்துள்ளது.

அதே நேரத்தில் பாகிஸ்தானில் முதல் டோஸ் தடுப்பு மருந்தை செலுத்திக் கொண்ட மக்கள் இரண்டாவது டோஸை செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டாததும் இதற்கு ஒரு காரணம். பாகிஸ்தானில் இதுவரை 95,59,910 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மொத்தமாக பாகிஸ்தானின் மக்கள் தொகையில் 1.2 சதவிகிதம் பேர் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கோட்டாவின் கூட்டாளியின் புதுப்புது கண்டுபிடிப்புக்கள்!

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்...

ஈரானில் நடந்த மக்கள் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததை பகிரங்கமாக்கிய ட்ரம்ப்!

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடந்த மாபெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்