15 வயது சிறுமியை விலைக்கு வாங்கி பாலியல் வர்த்தகம்; வாடிக்கையாளர்களிற்கு வலைவீச்சு: இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்!

Date:

15 வயதான சிறுமியை பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடுத்திய 35 வயதான ஒருவர் மவுண்ட் லவ்னியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த நபர் 15 வயது சிறுமியை இணையம் மூலம் பல்வேறு நபர்களுக்கு பணத்திற்காக விற்றுள்ளார்.

மவுண்ட் லவ்னியாவில் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்து, சிறுமியை அங்கு தங்க வைத்துள்ளார். இணையம் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்து, தினசரி அந்த வீட்டில் சிறுமியை பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.

சிறுமி தெல்கொடவை சேர்ந்தவர். அவரது தாயாருடன் பேசி, சிறுமியை பாலியல் வர்த்தகத்திற்காக சந்தேகநபர் வாங்கியுள்ளார். சிறுமியின் தாயாரிடமும் பொலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

சந்தேகநபர் நேற்று மொரட்டுவ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 3 மாதங்களில் சந்தேக நபர் சிறுமியை பல நபர்களுக்கு விற்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த காலகட்டத்தில் சிறுமியுடன் பாலியல் வர்த்தகத்தில் தொடர்புபட்டவர்களை அடையாளம் காண விசாரணை நடந்து வருகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இந்த வாரம் முதல் புதன் விடுமுறை இரத்து!

இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், புதன்கிழமைகளில் வழங்கப்பட்ட அரச...

யாழில் சிக்கிய திருடர்கள்

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் நகைகள், பணம் மற்றும் பொருட்களை களவாடிய சம்பவம்...

தமிழக சீரியலில் நடித்து வந்த இலங்கை நடிகை விபரீத முடிவு

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் நடித்த நடிகை சுபாஷினி தவறான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்