15 வயது சிறுமியை விலைக்கு வாங்கி பாலியல் வர்த்தகம்; வாடிக்கையாளர்களிற்கு வலைவீச்சு: இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்!

Date:

15 வயதான சிறுமியை பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடுத்திய 35 வயதான ஒருவர் மவுண்ட் லவ்னியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த நபர் 15 வயது சிறுமியை இணையம் மூலம் பல்வேறு நபர்களுக்கு பணத்திற்காக விற்றுள்ளார்.

மவுண்ட் லவ்னியாவில் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்து, சிறுமியை அங்கு தங்க வைத்துள்ளார். இணையம் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்து, தினசரி அந்த வீட்டில் சிறுமியை பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.

சிறுமி தெல்கொடவை சேர்ந்தவர். அவரது தாயாருடன் பேசி, சிறுமியை பாலியல் வர்த்தகத்திற்காக சந்தேகநபர் வாங்கியுள்ளார். சிறுமியின் தாயாரிடமும் பொலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

சந்தேகநபர் நேற்று மொரட்டுவ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 3 மாதங்களில் சந்தேக நபர் சிறுமியை பல நபர்களுக்கு விற்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த காலகட்டத்தில் சிறுமியுடன் பாலியல் வர்த்தகத்தில் தொடர்புபட்டவர்களை அடையாளம் காண விசாரணை நடந்து வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

இனப்படுகொலை வரலாற்றுத் தடயங்களை நாமே அழித்துவிட்டு இளையோரை வரலாறு தெரியாதவர்கள் என்று விமர்சிப்பது பெரும் அபத்தம் பொ. ஐங்கரநேசன் காட்டம்!

“இளைய தலைமுறை தமிழ்த்தேசிய அரசியலுடன் இல்லை அவர்களுக்கு எமது போராட்டத்தின் வரலாறும், நாம்...

MSC Elsa 3 கப்பல் விபத்து: கடலில் சிந்திய பிளாஸ்டிக் துகள்களில் 43-க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் சேகரிப்பு

கேரளக் கடற்கரைக்கு அருகே மூழ்கிய MSC Elsa 3 கப்பலிலிருந்து கடலில்...

இலங்கை வந்த பாலஸ்தீன யுவதிக்கு ஏற்பட்ட சோக முடிவு

பென்டாரா சுற்றுலாப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதற்காகப் பறந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்