அவுஸ்திரேலியாவின் மெல்பர்னில் புதியவகை டெல்ட்டா (Delta) கொரோனா வைரஸ் தொற்று, இலங்கையிலிருந்து சென்ற ஒருவர் மூலமே பரவியிருக்கலாமென கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து வந்து விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நபருடன் குறித்த பரவல் தொடர்புபடுவது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் பதில் பிரதமர் ஜேம்ஸ் மெர்லினோ தெரிவித்துள்ளார்.
மே 8ம் திகதி இலங்கையிலிருந்து வந்த நபருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட இந்நபர் 14 நாட்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு அவருக்கு முழுமையாக குணமடைந்த பின்னர் மே 23ம் திகதி வீடுசெல்ல அனுமதிக்கப்பட்டார்.
இதன் பின்னர் வடக்கு மெல்பேர்னில் 2 குடும்பங்களில் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.
இலங்கை சென்று வந்தவருக்கும், அந்த குடும்பங்களிற்குமிடையில் எதேனும் தொடர்புள்ளதா என்பதை அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.



