அவுஸ்திரேலியாவில் பரவும் புதிய வகை கொரோனா இலங்கையிலிருந்து சென்றவரால் பரவியிருக்கலாம்!

Date:

அவுஸ்திரேலியாவின் மெல்பர்னில் புதியவகை டெல்ட்டா (Delta) கொரோனா வைரஸ் தொற்று, இலங்கையிலிருந்து சென்ற ஒருவர் மூலமே பரவியிருக்கலாமென கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து வந்து விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நபருடன் குறித்த பரவல் தொடர்புபடுவது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் பதில் பிரதமர் ஜேம்ஸ் மெர்லினோ தெரிவித்துள்ளார்.

மே 8ம் திகதி இலங்கையிலிருந்து வந்த நபருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட இந்நபர் 14 நாட்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு அவருக்கு முழுமையாக குணமடைந்த பின்னர் மே 23ம் திகதி வீடுசெல்ல அனுமதிக்கப்பட்டார்.

இதன் பின்னர் வடக்கு மெல்பேர்னில் 2 குடும்பங்களில் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

இலங்கை சென்று வந்தவருக்கும், அந்த குடும்பங்களிற்குமிடையில் எதேனும் தொடர்புள்ளதா என்பதை அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.

 

spot_imgspot_img

More like this
Related

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...

தன்னைத்தானே சுட்டு உயிர்மாய்த்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன்...

13வது வாரமாகவும் தொடரும் வலி. வடக்கு காணி மீட்புப் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்