14 வயது சிறுவன் உருவாக்கிய கோ கொரோனா கோ கேம்! (Covid-19 Game)

Date:

பெங்களூருவைச் சேர்ந்த 14 வயது சிறுவன் கோ கொரோனா கோ என்ற கேமை உருவாக்கியுள்ளான். இது கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

பரவி வரும் கொரோனா பெரும் தொற்று காரணமாக தற்போது நாடுமுழுவதும் லாக்டவுனில் இருக்கிறது. மக்கள் எல்லாம் வீட்டிற்குள்ளேயே இருந்து அவரவர் வேலையை பார்க்கின்றனர். தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களில் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் வாய்ப்பு உள்ளவர்களுக்கு அந்த பணி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் கிளாஸ் மூலம் பாடங்களை படித்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் மாணவர்களுக்கு கோடிங் பயற்சி கொடுக்கும் ஆர்வம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. பலர் ஆன்லைன் மூலமே கோடிங் படித்து வருகின்றனர். இந்த ஆன்லைனில் கோடிங் படிப்பது குறித்து பல்வேறு விவாதங்கள் இருந்தாலும் இப்படியாக கோடிங் படித்த சிறுவன் தற்போது உருவாக்கியுள்ள வெப் ஆப் கேம் தற்போது வைரலாகியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த அபிநவ் ரஞ்சித் என்ற 14 வயது சிறுவன் தான் இந்த கேமை உருவாக்கியுள்ளார். இதை ஒரு வெப் ஆப் அதாவது ஆன்லைன் பிரவுசர்களில் விளையாட கூடிய கேமாக இதை உருவாக்கியுள்ளான். அச்சிறுவன் உருவாக்கியுள்ள வெப் ஆப் கேமின் பெயர் ”
கோ கொரோனா கோ” ஆம் கொரோனா வைரஸை மையமாக வைத்தே இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கேம் வைரலானதற்கு இந்த கான்செப்டும் ஒரு காரணம் என சொல்லலாம்.

இந்த கேமலில் முதலில் பிளேயர் கொரோனா வைரஸ் உடன் களத்தில் இறங்குவான். அதன் பின் கெரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு கவசங்களை பிளேயர் சேகரித்து கொரோனா தன்னை தாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த கேம் மொத்தம் 3 லெவல்களை கொண்டது. இந்த கேம் விளையாடும் போது வெறும் விளையாட்டு மட்டுமல்ல உண்மையில் நம்மை கொரோனா தாக்காமல் இருக்க நாம் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த கேம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக இந்த கேமின் 3 லெவல்களையும் முடித்தால் பிளேயருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்ற ரீதியில் கேம் வடிவமைக்கப்பட்டது. இதற்கு காரணம் இதை விளையாடுபவர்கள் மத்தியில் கொரோனா தடுப்பு மருந்து குறித்த விழிப்புர்ணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது தான்.

தற்போது சிறுவர்களுக்கு கோடிங் படிப்பு என்பது எளிதாகிக்கொண்டே வருகிறது. அதனால் வருங்காலத்தில் அபிநவ் போல பல சிறுவர்களை காண முடியும். அபிநவ் தற்போது இரண்டு கேம்களை உருவாக்கி வருகிறார். அதுவும் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முதல் ரோபோ அறுவை சிகிச்சை

இலங்கை தனது முதல் செயற்கை நுண்ணறிவு உதவியுடனான ரோபோ அறுவை சிகிச்சைகளை...

அதிகாரமற்று கூடும் தலைவர்கள்; உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாடல்

நீண்டகாலமாகப் பல்வேறு ஆட்சிகளில் அங்கம் வகித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்