கிளிநொச்சி மாவட்டத்தில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களில் ஒரு பிரிவான மட்பாண்ட உற்பத்தியாளர்களும் தற்போதைய நாட்டு நிலைமையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது நாட்டில் விதிக்கப்பட்டுள்ள பயணத் தடை காரணமாக தமது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
“வெளிமாவட்டங்களிலிருந்து கொள்வனவாளர்கள் வர முடியாத நிலை மற்றும் கோவில் திருவிழாக்கள், கலை நிகழ்வுகள் என்பன நடாத்த முடியாத சூழ்நிலையும் எங்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியாத நிலைமையினை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் நாம் வாழ்வாதார நெருக்கடியை எதிர்கொள்கிறோம்.
எம்மை போன்ற பாரம்பரிய சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு இவ்வாறான சூழ் நிலைகளின் போது உதவி செய்வதற்கு அதிகாரிகள் திட்டங்களை வகுத்து செயற்பட
வேண்டும்“ என்றும் கோரியுள்ளனர்.




