4 முறை கொந்தளித்த மெராபி எரிமலை; பீதியில் இந்தோனேசியா பொதுமக்கள்!

Date:

இந்தோனேசியாவில் மெராபி எரிமலை 4 முறை வெடித்தது பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியா அடிக்கடி இயற்கை சீற்றங்களையும், பேரிடர்களையும் சந்திக்கும் நாடு. வெள்ளம், புயல், நிலச்சரிவு, சுனாமி, எரிமலை வெடிப்பு போன்றவற்றை இந்தோனேசியா அடிக்கடி எதிர்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இந்தோனேசியாவில் உள்ள மெராபி எரிமலை நான்கு முறை வெடித்து பீதியை கிளப்பியுள்ளது. மெராபி எரிமலை நான்கு முறை வெடித்ததாகவும், 1.5 கிலோமீட்டருக்கு எரிமலைக் குழம்பு வழிந்தோடியதாகவும் இந்தோனேசியா தெரிவித்துள்ளது.

யோக்யகர்தா, மத்திய ஜாவா மாகாணங்களின் எல்லைப் பகுதியில் இந்த எரிமலை அமைந்துள்ளது. எரிமலை உச்சியில் இருந்து 50 மீட்டர் உயரத்துக்கு வெள்ளை புகையை கக்கியுள்ளது.

எரிமலையை சுற்றி 3 கிலோமீட்டர் பரப்பளவுக்கு ஆபத்தான பகுதி என அரசு அறிவித்துள்ளது. மேலும் இப்பகுதிகளில் இருக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மெராபியில் இருந்து ஓடும் நதிகளுக்கும் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மெராபி எரிமலை 2010ஆம் ஆண்டு வெடித்தபோது பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி வேறு பகுதிகளுக்கு சென்றனர்.இந்தோனேசியாவில் 127 ஆக்டிவ் எரிமலைகள் இருக்கின்றன. மேலும், 50 லட்சம் மக்கள் மிகவும் ஆபத்தான பகுதிகளில் வசிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...

நிந்தவூர் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூர் மத்திய வட்டாரத்தை உள்ளடக்கிய நிந்தவூர் 03 மற்றும் 15ஆம் பிரிவுகளில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்