உலகளவில் குறையாத கொரோனாவின் தாக்கம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 கோடியை கடந்தது!

Date:

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,37,05,249 ஆகி இதுவரை 37,35,776 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,92,767 பேர் அதிகரித்து மொத்தம் 17,37,05,249 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 9,000 பேர் அதிகரித்து மொத்தம் 37,35,776 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 15,68,19,108 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,31,50,365 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,988 பேர் அதிகரித்து மொத்தம் 3,42,03,759 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 385 அதிகரித்து மொத்தம் 6,12,200 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,81,00,553 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,14,537 பேர் அதிகரித்து மொத்தம் 2,88,08,372 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,683 அதிகரித்து மொத்தம் 3,46,784 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,69,76,611 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65,471 பேர் அதிகரித்து மொத்தம் 1,69,07,425 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,661 அதிகரித்து மொத்தம் 4,72,629 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,52,90,500 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,654 பேர் அதிகரித்து மொத்தம் 57,07,683 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 57 அதிகரித்து மொத்தம் 1,09,973 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 54,06,048 பேர் குணம் அடைந்துள்ளனர்.

துருக்கியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,126 பேர் அதிகரித்து மொத்தம் 52,82,594 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 92 அதிகரித்து மொத்தம் 48,068 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 51,54,771 பேர் குணம் அடைந்துள்ளனர்.

 

spot_imgspot_img

More like this
Related

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...

நிந்தவூர் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூர் மத்திய வட்டாரத்தை உள்ளடக்கிய நிந்தவூர் 03 மற்றும் 15ஆம் பிரிவுகளில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்