27.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
இலங்கை

யாழ்ப்பாணத்திற்கு வெங்காயம் வாங்க வந்தார்களாம்!

இன்று யாழ் குடாநாட்டில் மழையுடன் கூடிய காலநிலை நிலவு வரும் நிலையில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியில் உள்ள வல்லை பாலத்தில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த கப் ரக வாகனம், பாலத்தில் வழுக்கி, கட்டுப்பாட்டை இழந்து கடல் நீரேரிக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நெடுங்கேணி பகுதியில் இருந்து பருத்தித்துறைக்கு வெங்காயம் ஏற்றுவதற்கு வந்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதியான ஒலுமடு நெடுங்கேணி பகுதியினை சேர்ந்த செல்வசந்தின் ரகுநேசன் காயமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

சிகரம் கல்வி நிறுவனத்தின் வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு

east tamil

ஹபரணையில் வாகன விபத்து: இருவர் பலி – 25 பேர் படுகாயம்

east tamil

சொத்து தகராற்றினால் இளம் ஆசிரியை கொலை: தாய், சகோதரன் கைது!

Pagetamil

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகனம் விபத்து

east tamil

குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது

east tamil

Leave a Comment