யாழ் நகரம் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகளாகியது!

Date:

1981ஆம் ஆண்டு அன்று ஆட்சியிலிருந்த ஐ.தே. கட்சி மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நிறுவ ஒரு தேர்தலை ஜுன் 4ல் நடத்தியது. பாராளுமன்றத்தில் அதிகூடிய பெரும்பான்மையைக் கொண்ட தனது அதிகார வெறியை யாழ்ப்பாணத்திலும் நிலைநாட்ட படாதபாடுபட்டது.

31.05.1981 ஞாயிற்றுக்கிழமை நாச்சிமார் கோவிலடியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காவலுக்கு நின்ற பொலிஸ்காரர்களை சுட்ட சம்பவத்துடன் தேர்தல் கடமைகளுக்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான அடியாட்களுடன் பொலிஸ்காரரும் சேர்ந்து யாழ்ப்பாணத்தை நிர்மூலமாக்கினர்.

கோவிலடியில் ஆரம்பித்த வன்முறை நகருக்கும் பரவியது! கே. கே. எஸ் வீதியிலிருந்த வீடுகளும் கடைகளும் வாகனங்களும் அடித்து நொருக்கப்பட்டு தீமூட்டப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் பஸ்நிலையத்திற்கு முன்பாகவிருந்த 36 தொடர் வரிசைக் கடைகளில் பூபாலசிங்கம் புத்தகசாலை, மக்மிலன் புத்தக கடை, பொபி கபே, ராஜன் புத்தகசாலை, நியூ வசந்தாஸ், ஐங்கரன் ஸ்ரோர்ஸ், ராடோ கபே, றீகல் கூல்பார், வேலும் மயிலும் கடை, சிவாஸ் கூல்பார் (எல்லாவற்றையும் பெயிரிடவில்லை) போன்ற 27 கடைகள் பெற்றோல் ஊற்றி தீயிடப்பட்டன.

இதைவிட நவீனசந்தையில் உள்ள கடைகள், ஆஸ்பத்திரி வீதியலிருந்த கடைகள், கஸ்தூரியார் வீதிக் கடைகள் என எல்லாமே எரித்து நாசமாக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தின் பாராளுமன்ற உறுப்பினரான யோகேஸ்வரனுடைய வீடும் அவரதும் அவரது நண்பரதும் வாகனமும் எரிக்கப்பட்டன. வந்தவர்களுக்கு எம்.பி யாரெனத் தெரியாத காரணத்தால் மயிரிழையில் அவரும் அவரது மனைவியும் உயிர்தப்பினர். கூட்டணியின் காரியாலயமும் முற்றாக எரிக்கப்பட்டது.

சுன்னாகத்திலும்சில கடைகள் கடையுடைப்புக்கும், சூறையாடலுக்கும், தீவைப்புக்கும் உட்பட்டன

-தங்க. முகுந்தன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாமல் பேசிய அர்ச்சுனா!

கச்சைதீவை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தையே தமிழகத்திற்கு கொடுங்கள் என நாடாளுமன்றத்தில் உளறிக்கொட்டியுள்ளார் அர்ச்சுனா...

கோப்பாய் விபத்தில் இரு இளைஞர்கள் பலி

யாழ்ப்பாணம் கோப்பாயில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு...

தமிழகத்தில் பாஜகவுக்கு பேரிடி: 27-ல் வென்றது 1 மட்டுமே – காரணம் என்ன?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 1 தொகுதிகளில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்